Wednesday, 10 April 2013

மாதவிடாய் – ஆவணப்படம் ஒரு பார்வை (நன்றி: www.aranthai.com )


இது எனது நண்பன் www.aranthai.com - இல் எழுதிய கட்டுரை....


மிகவும் முக்கியமான மாத்விடாய் என்ற இத்திரைப்படம் அனைவரிடமும் சென்றடைய வேண்டும் என்ற சீரிய நோக்கமுடன் இக்கட்டுரையைப் பகிர்ந்துகொள்கிறேன்...

நன்றி:  www.aranthai.com &  திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பு, அறந்தாங்கி.



மாதவிடாய் – ஆவணப்படம் ஒரு பார்வை

திரைப்பார்வை & கட்டுரையாக்கம் : Dr. S.தெட்சிணாமூர்த்தி, மருத்துவ அலுவலர்,
                                 திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பு,
                                 அறந்தாங்கி. www.aranthai.com

இயக்கம்: திருமதி. கீதா இளங்கோவன்
தயாரிப்பு: திரு. இளங்கோவன்

“மாதவிடாய்  - இது ஆண்களுக்கான பெண்களின் படமல்ல...
மனித குலத்திற்கேயான பெண்களின் படம்...
சத்யஜித்ரே, அகிரா குரோசேவா, பாலா இவர்களின் படைப்புகளை
வானவில், அருவி ஆகியவற்றோடு ஒப்பிட்டால்... 
“மாதவிடாய் என்ற இந்த ஆவணப்படமானது காற்று, நீர் போல
மனிதனின் அத்தியாவசியத்தேவை...
 உலகப் பொருளாதாரம், உலகப்போர்கள், உலகத் தலைவர்கள், தீவிரவாதம்,
காதல், குடும்ப உறவுகள் பற்றி பல ஆயிரக்கணக்கான திரைப்படங்கள்,
குறும்படங்கள் வந்திருந்தாலும், தாயாக, சகோதரியாக, மனைவியாக,
தோழியாக நம் வாழ்வின் பல பக்கங்களை தன் தாய்மையாலும், தோழமையாலும்
உயிர்ப்பாக வைத்திருக்கும், நம் உயிரின் சக ஜீவன்களான பெண்களின் மிக
முக்கியமான ஒர் இயற்கை நிகழ்வை இதுநாள்வரை நாம் கண்டுகொள்ளத் தவறி,
மாபெரும் தவறை இழைத்துவிட்டோமோ என்று நம் மனதை
உலுக்கிப் போட வைத்திருக்கிறது இந்த “மாதவிடாய்....

“மாசா மாச ரத்தப் போக்கு ஏலேலம்படி ஏலோ
மாதவிடாய் ஆனதுவே ஏலேலம்படி ஏலோ
தீட்டு தீட்டு என்று சொல்லி ஏலேலம்படி ஏலோ
ஒதுக்கி வச்சு ஒடுக்குனாங்க ஏலேலம்படி ஏலோ
என்று தொடங்கும் அந்த கிராமியக் கணீர்க் குரலே
இந்த 38 நிமிட திரைபடத்தை ஒரே வரியில்
விளக்கிவிடுகிறது...

முதலில் பாமர மக்கள் தொடங்கி பாலபாரதி அவர்கள் வரை பெண்களின்
மாதவிடாய் பற்றிய புரிதலை பதிவு செய்யும் ஆவணப் படம்,
அடுத்து அது ஓர் உடலில் இயல்பாகநிகழக்கூடிய ஒர் நிகழ்வுதான் என்பதை
மருத்துவர்கள் மூலம் பாமரனுக்கும் புரியவக்கும் செயலை மிகக் கச்சிதமாக்ச்
செய்கிறது....

மாதவிடாய்க் காலங்களில் இச்சமூகம் பெண்களுக்கு என்னவெல்லாம்
செய்வதன்மூலம் ஒர் பெண் இந்நிகழ்வை ஓர் இயல்பான நிகழ்வாய்
எடுத்துக்கொள்வாள் என்பதற்கான வழிகளையும் மிகத் தெளிவாக
விளக்குகிறது.

கல்வி, சுகாதாரம், பொருளாதாரம் இவற்றிலெல்லாம் மிகவும் பின்தங்கிய
அஸ்ஸாமில், ஒரு கோவிலில் மாதவிடாயை ஓர் தெய்வீக நிகழ்வாக
வழிபடுகிறார்கள் என்று ஆச்சரியப்படுத்தும் “மாதவிடாய்”...
மிகவும் முன்னெறிய மாநிலமென்று மார் தட்டிக்கொள்ளும் நமது
தமிழகத்தின் ஓர் கிராமத்தில் தனியாக ஓர் அறையே கட்டிவைத்து
ஒதுக்கி வைத்துள்ளதைத் தெரியப்படுத்தி அதிர்ச்சி அளிக்கவும்
தவறவில்லை...
 இது ஓர் குறும்படம் என்பது அளவில் மட்டும்தான்....
மற்றபடி ஓர் பெரும்படமாக சமூகத்தின் மற்ற அவலங்களுக்கும்
சாட்டையடி கொடுக்கவும் தவறவில்லை....

ஆண்டாண்டு காலங்களாய் தலித்துகள் மட்டுமே துப்புறவுப் பணியைச்
செய்ய்ம்படி ஈடுபட வைத்துள்ள சமூகத்தின் சாதீயக்கொடுமையைச்
சுட்டிகாட்டுகிறது...
 ‘மாற்றுத்திறனாளிகள் பொது இடங்களில் எப்படி இயற்கை
உபாதைகளைக் கழிப்பார்கள்? அதற்கான ஏற்பாடுகளை ஏன் இன்னும்
நாம் மேற்கொள்ளவில்லை? என்ற கேள்விகளை வேதனையோடு
வைக்கிறது இந்த “மாத்விடாய்.

முதலில் பெண்களுக்கே மாதவிடாய் என்பது அருவறுக்கத்தக்க
அசிங்கமான விஷயமல்ல என்பதை அழுத்தந்திருத்தமாக தெளிய வைத்து...

முத்லில் "இது பெண்களுக்கான பெண்களின் படம்" என்பதையும்....

தம் உயிரின் பாதியான பெண்களின் மிக நுட்பமான ஓர் இயற்கை
நிகழ்வை ஆண்கள் இதுவரை சரியாக உணர்ந்துகொள்ளவே இல்லை
என்று அவர்களுக்கு அன்பாய் உணர்த்தி,
இது ஆண்களுக்கான பெண்களின் படம் என்பதையும்...

“மாதவிடாய் நிகழ்வு இயல்பான ஒன்றாக எடுத்துக்கொள்ளப்பட
வேண்டுமென்றால் பெண்களுக்கு உளவியல் ரீதியாக உறுதுணையாக
இருப்பதோடு, பொது இடங்களில் கழிவறைகளில சானிட்டரி நாப்கின்களை
(Sanitary Napkins) அப்புறப்படுத்துவதற்கான வசதிகளை ஓர் சமூகம்
செய்து தரவேண்டும் என்ற தீர்வை முன்வைப்பதில்,
“இது சமூகத்திற்கான பெண்களின்படம்” என்பதையும் நிரூபிக்கிறது
இந்த “மாதவிடாய்”....


“ஒரு சிறு பொறிதான் காட்டையே அழிக்கும் என்பார்கள்...
 திருமதி. கீதா இளங்கோவன் அவர்களின் இந்த “மாதவிடாய் என்ற பெயர் கொண்ட
இச்சிறு பொறி, மாதவிடாய் பற்றிய சமூகத்தில் நிகழும் மூடநம்பிக்கைக் காட்டினை
அழிக்கவேண்டுமென்றால் சமூக நலன்பால் காதல் கொண்ட நாம் அனைவரும்
இந்தப் பொறியை (இதிரைப்பட DVD-ஐவீடுதோறும், தெருக்கள்தோறும்,
தேசந்தோறும் எடுத்துச் செல்வதே... 
அந்த மாபெரும் படைப்பாளிக்கு நாம் செலுத்தும் மரியாதை மட்டுமல்ல...
நம்மைச் சுமந்த பெண் குலத்திற்கேநாம் செய்யவேண்டிய சமூகக் கடமையும் கூட....
 “மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா – கவிமணி.
மாதவம் செய்து பிறந்த அந்த பெண்களின் மிக முக்கியமான உடலியல் நிகழ்வு
பற்றிய சமூக விழிப்புணர்வுக்கு “மாதவிடாய் என்ற இத்திரைப்படம் ஓர் “மாவரம்”. 
கால்ங்காலத்திற்குமான ஓர் ஆவணப்படத்தினை – ஓர் சமூகப் பொறியை படைத்த
திருமதி. கீதா இளங்கோவன் அவர்கள் தலையில் வைத்துக் கொண்டாடப்பட வேண்டியவர்கள்...
பெரியாரைப் போல.... 

எடுத்துக்கொண்ட “கரு” சிதைந்துவிடாமல்... அதனை நல்ல முறையில் சுகப்பிரசவமாக்கித் தந்த ஒளிப்பதிவாளர் “ஆஷிமா செனாய்ஒலிப்பதிவாளர் “ஆக்ருதி ராவ் மற்றும்
பட்த்தொகுப்பாளர் “பாபு” ஆகிய அனைவரையும் பாராட்டுவது மிகவும் அவசிய்மான ஒன்று..

தயாரிப்பாளர் திரு. இளங்கோவன் அவர்கள் தானுண்டு தனது ரயிலுண்டு
என வாளாவிருந்துவிடாமல், தன்சக தர்மினியின் உழைப்பிற்கு உறுதுணையாய்
இருந்தமைக்குக் கண்டிப்பாகப் பாராட்டப்படவேண்டியவராகிறார்.

திருமதி. கீதா இளங்கோவன் அவர்கள்...
காலங்காலமாய் பேச மறுக்கப்பட்ட
ஓர் இஸ்லாமிய சகோதரியைப் பேச வைத்திருக்கிறார்...
ஓர் மாற்றுத் திறனாளிப் பெண்ணைப் பேச வைத்திருக்கிறார்...
ஓர் குக்கிராமத்தில் வசிக்கும் பெண்ணையும் பேச வைத்திருக்கிறார்...

இனி உரக்கப் பேசவேண்டியது நம் சமூகம் மட்டுமே......

Dr. S.தெட்சினாமூர்த்தி,
மருத்துவ அலுவலர்,
அரசு ஆரம்ப சுகாதார நிலையம்,
திருப்புனவாசல்,
புதுக்கோட்டை மாவட்டம்.
திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பு,அறந்தாங்கி. www.aranthai.com






Thursday, 14 February 2013

வாலென்டைன்ஸ் டேயும்... எனது விமானப் பயனமும்....


வாலென்டைன்ஸ் டேயும்... எனது விமானப் பயனமும்....



ஃபிப்ரவரி 14, 2009-ஆம் ஆண்டு புனேயிலிருந்து மும்பை வரை டொயோட்டா குவாலிஸில் பயனம் செய்து...

மும்பையிலிருந்து சென்னைக்கு ஒரு தனியார் விமானத்தில் (பெயர் வேண்டாம்) சென்னைக்கு மூன்று பேர் கொண்ட குழுவாகப் பயணம் செய்தோம்...

ஒரு தள்ளுவண்டியில் தண்ணீர், சாண்ட்விச், மற்றும் ஏதேதோ உணவுப் பொருட்களை விற்றுக்கொண்டு இரு அழகிய ஏர் ஹோஸ்டஸ் பெண்கள் சென்றனர்....

தண்ணீர் கூட பணம் கொடுத்து வாங்க வேண்டிய அவ்விமானத்தில்...

கடுப்புடன் கூடிய பயணம்....

அப்பொழுதுதான் ஒரு சிறிய நகைச்சுவை....

அடுத்த பத்து நிமிடங்களில் மீண்டும் ஒரு தள்ளுவண்டி...
இப்பொழுது உணவுப் பொருட்கள் அல்ல... பரிசுப்பொருட்கள்...

விமானப் பணிப்பெண்கள் கோரிய வசனம்...

"டூ யு வான்ட் டூ பை எனி கிஃ ப்ட் டூ யுவர் வாலென்டைன் சார்..?"

(உங்களுடைய வாலென்டைனுக்கு ஏதேனும் பரிசுப் பொருட்கள் வாங்க வேண்டுமா...?)

அடப் பாவிகளா....? 

வாலென்டைன்ஸ் டே என்றால் காதலர் தினம் என்று கூறுவதால் 

வாலென்டைன் என்பது காதலன் அல்லது காதலியின் பொதுப் பெயர் என்று எண்ணிய அப்பெண்களின் அறியாமையை எண்ணி மனதுக்குள் சிரித்துக்கொண்டே வந்தேன்....

Sunday, 10 February 2013

எங்க அக்கா பையன விஸ்வரூபம் பாக்க அழைச்சுக்கிட்டுப் போன கதை.... படிச்சுட்டு திட்டாதீங்க.... பிளீஸ்....


எங்க அக்கா பையன விஸ்வரூபம் பாக்க அழைச்சுக்கிட்டுப் போன கதை....
படிச்சுட்டு யாரும் 
திட்டாதீங்க.... பிளீஸ்....






நேத்து காலையில எங்க அக்கா பையன (இன்சினியரிங் ஸ்டூடன்ட்) கண்டிப்பா ஒன்ன விஸ்வரூபம் பாக்க அழைச்சுக்கிட்டுப் போறேன் அப்புடின்னு சொல்லிட்டு... வெளியில ஒரு வேலையா போயிட்டேன்...

திடீர்னு 4.30க்கு போன் செஞ்சு என்ன ஆச்சு அப்புடின்னு கேட்டான்...

அய்யனாரும் (Lecturer in AIHT) நம்ம கூட வர்றானாம்...
நங்கநல்லூர் போகலாம் அப்புடின்னு சொல்லி...

8.30 வரை நமக்கு டைம் இருக்கு அப்புடின்னும் சொல்லி....

நங்கநல்லூர் ராஜ ராஜேஸ்வரி கோவில், பக்கத்துல இருக்குற பெருமாள் கோவில், பாபா கோவில் எல்லாம் போனா...

மணி 8.35....

லேட்டாயிடுச்சே அப்புடின்னு எங்க அக்கா பையன் கேக்க...

9.00 மணி வரைக்கும் கவலைப்பட வேண்டாம்னு தைரியம் சொல்லி...

கரெக்டா 8.45 க்கு உள்ள நொளைஞ்சு...

நல்லா பாரு...

விஸ்வரூபம்...

ஆஞ்சநேயரோட விஸ்வரூபம்....

கன்னத்துல போட்டுக்க...

என்று கூறி ஆஞ்சநேயர கும்புட்டுட்டு....

வீட்டுக்கு வந்துட்டோம்....

அவ்வளவுதான்..

ஆனா எங்க அக்கா பையன் திட்டிக்கிட்டே வர்றான்....

நமக்கு இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா என்ன....?

என்றும் அன்புடன்,
சு.ஜெயக்குமார் 

முக்கியக் குறிப்பு:



இன்று அவனுக்கும் எனது அண்ணனுக்கும் காசி தியேட்டரில் டிக்கெட் புக் செய்து விஸ்வரூபம் பார்த்துவிட்டு வந்துவிட்டார்கள்....

நான்தானுங்க டிக்கெட் புக் பண்ணிக் குடுத்தேன்...

Tuesday, 1 January 2013

சொந்தமா ஒரு கார்.........வாங்கணும்...

சொந்தமா ஒரு கார்.........வாங்கணும்...



கோவையில் படித்துகொண்டிருந்தபொழுது...
(GPT, கோயம்புத்தூர், 1999-ஆம் வருடம்...)

கல்லூரி முடிந்து... மாலையில் அவினாசி சாலையில் நடந்து CMC அல்லது ஹோப் காலேஜ் ரோடு நிறுத்தம் வரையோ...

அல்லது கொடீசியா பில்டிங் வரையோ நடந்து செல்வதை நானும்... சில நண்பர்களும் வழக்கமாகக் கொண்டிருந்தோம்...

அவ்வாறு நடக்கையில் சாலையோரங்களில் நிறுத்தப்பட்டிருக்கும் விதவிதமான கார்களின் கதவுகளில்... கண்ணாடிகளில்... முகம் பார்த்துக்கொண்டே செல்வோம்...

ஒரு நாள் நண்பன் பழனி கார்த்தி (தற்பொழுது Robert Bosch GmbH, கோவையில் பொறியாளர்), 

"நண்பா, படிச்சு முடிச்சதும்... காசு சம்பாதிச்சு சொந்தமா ஒரு..."

அவன் முடிக்கும் முன்னர் நான், "கார் வாங்கனுமா நண்பா...?"

பழனி கார்த்தி, "இல்ல நண்பா...கார் கண்ணாடி வாங்கணும்..."

நான், "படுபாவி..."

இப்பொழுதும் எங்கே காரை பார்த்தாலும்...

கார் கண்ணாடியும்... பழனி கார்த்தியும்தான் நினைவுக்கு வருகிறார்கள்...

கார்த்தி... ஹாப்பி நியூ இயர் நண்பா....


என்றும் அன்புடன்,
சு.ஜெயக்குமார்

Wednesday, 26 December 2012

அப்புடி என்னங்க நான் தப்பா கேட்டுட்டேன்...? முருகா இது என்னப்பா எனக்கு வந்த சோதனை...?

அப்புடி என்னங்க  நான் தப்பா கேட்டுட்டேன்...?



முந்தா நாள் (கிருஸ்துமஸுக்கு முதல் நாள்) ஆபீஸ்ல இருந்து வீட்டுக்கு வந்தப்ப... (ஃபிரெண்டு பைக்ல பின்னாடி ஒக்காந்துக்கிட்டு...)

கத்திப்பாரா பாலம் உச்சியில இருக்குறப்போ... ரைட் சைடுல கைய்ய  காட்டி "ஜெகஜ்ஜோதியா இருக்கு பாருங்க ஜீ..."அப்புடின்னு பிரெண்டு சொல்ல... 

"ஜோதி தியேட்டர சொல்லுறீங்களா ஜீ..? " அப்புடீன்னு அப்பாவியா நான் கேக்க...(சத்தியமா..லைட் எல்லாம் போட்டு பளிச்சுன்னு இருந்துச்சுங்க...)

லாங் சைலென்ஸ்........

பாலத்த விட்டு எறங்குனதும் பிரெண்டு சொல்லுறாரு...
"ஒருநாள் இல்லைன்னா ஒருநாள் ஒங்கள பாலத்துல இருந்து தள்ளிவிடலன்னா பாருங்க... எம்ப்பேர மாத்தி வச்சுக்குறேன்..." அப்புடீன்னு...

அப்புறம்தான் தெரிஞ்சது... அவரு கை காட்டி சொன்னது புனித தோமையார் மலையை (St. Thomas Mount) ...

இனிமே பாலத்த விட்டு எறங்குற வரைக்கும் எதுவும் பேசக்கூடாது...

அப்பத்தான் உசுர காப்பாத்திக்க முடியும் போல...?

முருகா இது என்னப்பா எனக்கு வந்த சோதனை...?

தப்பிக்க வேற வழியே இல்லையா...?

என்றும் அன்புடன்,
சு.ஜெயக்குமார் 



Wednesday, 12 December 2012

சே... யாருப்பா ஃப்ளோர்ல ink -க கொட்டுனது...? சுத்தமாஅறிவே இல்லப்பா...

சே... யாருப்பா ஃப்ளோர்ல  ink -க கொட்டுனது...?
சுத்தமாஅறிவே இல்லப்பா...





சிறு வயதிலிருந்தே எனக்கு ண் ண் பேனாக்களில் எழுதுவது மிகவும் பிடிக்கும்....

அதுவும் புது விதமான எந்த பேனா கண்ணில் பட்டால் (பால் பாயின்ட் & பவுண்டைன் இங்க்) வாங்கி எழுதிவிடுவேன்....

இத்தகைய ஒரு பேனா காதலனை வெறுப்பேற்றிய சம்பவம்...

திங்கள் கிழமை காலை... 9.00 மணி...

அலுவலகத்தில் எங்கள் இருக்கை இருக்குமிடத்திற்கு செல்லும் வழி முழுவதும் நீல நிற பேனா மை (இங்க்-ink) பரவலாகச் சிதறி இருந்தது...
இந்த வேலையை யார் செய்தது என்று யாருக்கும் தெரியவில்லை....

நிறைய பேனா பயன்படுத்தியதால் எனக்கு நன்றாகத் தெரிந்தது... அது Pilot Hi-Tecpoint 0.5 மைக்ரோடிப் பேனாவின்  (MICRO  TIP PEN ) இங்க் என்பது...
இன்னும் கொஞ்ச நேரத்திற்குள் அதனை சுத்தம் செய்யாவிட்டால் அதன் கறை எக்காலத்திலும் விடாது என்பதும் எனக்குப் புரிந்தது...

எங்கள் அலுவலகத்தில் எனது இடம் அமைந்துள்ள இடம் நான்கு பேர் அடங்கிய ஒரு கேபின் போன்ற அமைப்பாக இருக்கும்...

எனக்குப் பக்கவாட்டில் ஒருவர்.... எங்கள் இருவருக்கும் பின்புறம் எங்களுடன் காய் விட்டு சண்டை போட்டதுபோல் முதுகைக் காட்டிக்கொண்டு இருவர்....
ஆனால் மிகவும் ஒற்றுமையான கேபின்... அந்த இங்க் சம்பவம் நடக்கும் வரை...

தரையில் சிதறி இருந்த ink-கினை மிதித்துக்கொண்டு ஒருசிலர் நடந்து சென்றனர்....

9.05 மணி...

எங்கள் கேபின் நண்பர்கள் (மற்ற மூறு பேர்) வந்தனர்...

யாரு ஜீ இப்புடி ink-க கொட்டுனது.... என்று மூவரும் பதறியதும்தான் கவனித்தேன்....அதில் இருவரது இருக்கையின் கீழே வரை ink கொட்டி இருந்தது....

அதை கவனிக்காமல் காலால் பரவலாக இழுத்து விட்டு விட்டார்கள்...

உடனடியாக ஒரு நண்பர் மற்றவரைப் பார்த்து "நீதானே செஞ்சது?" என்று கேட்க... மற்றவர் "அது நான் கேக்க வேண்டியகேள்வி... நீ முந்திக்கிட்டியா..?" என்று பதிலிறுக்க...
இன்னும் ஒரு சிலர் வந்து மற்ற இருவரையும் என்கரேஜ் (ENCOURAGE) செய்ய சிறு சண்டை பெரிதாக மாறத் தொடங்கியது...

எனக்கு பயங்கர ஆத்திரம்.... சிறு குழந்தைகள் போல் இப்படியா ஒன்றும் இல்லாத விஷயத்திற்கு அடித்துக் கொள்வது என்று...

ink-கினை தாண்டிச் சென்று தரை சுத்தம் செய்யும் நபரை அழைத்துவரச் சென்றிருந்தேன்...
வந்து பார்த்தால் இருவரும் வெவ்வேறு திக்கில் பார்த்தவாறு அமர்ந்திருக்க இடையில் இடையில் திட்டிக்கொள்கிறார்கள்.... 

நானும் வெறுப்புடன் அமர்ந்திருந்தேன்... யார் சண்டை போட்டுக்கொண்டாலும் எனக்குப் பிடிக்காது....

10.30 மணி...
இங்க் சுத்தம் செய்யப்பட்டது.... சிறிதளவு கறை தெரிந்தது... அது நிச்சயமாகப் போகாது....

மாலை 3.00 மணி...

ஒரு மீட்டிங்....

எப்பொழுதும் எனது பக்கவாட்டிலுள்ள நண்பர் பின்னால் இருப்பவரிடம்தான் பேனா வாங்கி எழுதுவார்...

இப்பொழுதுதான் சண்டை ஆயிற்றே...

என்னிடம் வந்து "ஜெயக்குமார் ஜீ (அப்புடித்தான் கூப்புடுவாங்க...)... பேனா கொடுங்க..." என்று கேட்க....

பணியாயிருந்த நான் திரும்பி இவர்கள் சண்டையை முடிக்கும் உறுதியுடன்... "பேனா தர்றேன்... பட் ஒரு கண்டிஷன்...."

நண்பர், "என்ன... மறக்காம திருப்பிக் குடுக்கணுமா...?"

நான், "இல்ல ஜீ..."

நண்பர், "இவனோட பேசணுமா ..."

நான் "அதுவும் இல்ல ஜீ..." 

நண்பர், "அப்புறம் என்ன...?"

நான் "இல்ல ஜீ... பேனா சரியா எழுதலன்னா உதறக் கூடாது...

உடனடியாக... 

"டாய் ..." என்ற சப்தத்துடன் இருவரும் அடிக்க வருகிறார்கள்...

நீங்களே சொல்லுங்க... 
INK-க தரையில கொட்டுனா அது அவ்ளோ  பெரிய  தப்பா என்ன...?

Sunday, 9 December 2012

நேற்று நான் ஒரு நிகழ்ச்சிக்குப் போயிருந்தேன்... Madhavidaai (Menses)-Documentary release function மாதவிடாய்- ஆவணப்பட வெளியீட்டு விழா நிகழ்ச்சி


நேற்று நான் ஒரு நிகழ்ச்சிக்குப் போயிருந்தேன்...

Madhavidaai (Menses)-Documentary release function மாதவிடாய்- ஆவணப்பட வெளியீட்டு விழா நிகழ்ச்சி






பொதுவா சின்ன வயசுலேர்ந்தே ஃபோட்டோ, வீடியோ அப்புடின்னாலே எனக்கு ரொம்ப அலர்ஜி....

எங்க அக்காக்கள் மற்றும் அண்ணன்கள் திருமணங்களிலேயே விரல் விட்டு எண்ணிவிடும் அளவிற்குதான் புகைப்படங்களில் இடம் பெற்றிருப்பேன்....

(10 போட்டோவா? அப்புடின்னு கேக்கக் கூடாது....)

சற்றே தாமதமாகச் சென்றால் கடைசி வரிசையில் அமர்ந்துவிடலாம்.என்ற எண்ணத்தில் 11 மணிக்கு ஹால் உள்ளே சென்றேன்...

இனி நிகழ்ச்சியில் நிகழ்நதவை....

நான் உள்ளே சென்ற நேரத்தில் இளங்கோவன் பாலகிருஷ்ணன் அவர்கள் பேசிக்கொண்டிருந்தார் (மென்மையான குரல்)...
ஒவ்வொருவரையும் அவர் வரவேற்றுக் கொண்டிருந்தார்...
மேடையில் நான் பார்க்க விரும்பிய முக்கியப் பெண்மணி "பால பாரதி" அவர்கள் இல்லை....
காரணம் முன்னரே கூறப் பட்டிருக்க வேண்டும்....

(லேட்டா போனதுமில்லாம பேசுறதப் பாரு....)

பின்னர் திரு.பிரபாகரன் அவர்கள்  பேச வரும் ஒவ்வொருவரையும் அறிமுகப்படுத்தி வைத்ததோடு அல்லாமல் அவர்களை பற்றிய விளக்கமான ஒரு சிறு உரையே நிகழ்த்திக் கொண்டிருந்தார் (அருமை... பாராட்டுக்கள்...)

ஆங்கிலத்தில் பேசிய திரு. K. ரவீந்திரன் அவர்களும் மிக நன்றாகவே வாழ்த்திப் பேசினார்....

மருத்துவர். தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் தனக்கே உரிய நகைசசுவை பாணியில் மிகச் சிறப்பாகப் பேசினார்....

அவருடைய பேச்சின் இறுதியில் எப்பொழுதோ வந்திருக்க வேண்டிய திரைப்படமிது....உங்கள் மூலம் இப்பொழுதாவது வந்தததே என்று கூறியது அருமை...
(இளங்கோவன் சார் ஒங்க ரயில்வே துறை பற்றிய ஜோக் மிகவும் அருமை.... பழைய ஜோக்குன்னாலும் சூப்பர்...)

நான் மிகவும் மதிக்கும் திரு. மாலன் அவர்கள் பேசுகையில் பூபெய்தும் நிகழவை பல் விழும் நிகழ்வுடன் ஒப்பிட்டதும்....
பெண்கள் அடக்குமுறை என்பதை அடக்குமுறை அரசியலுடன் ஒப்பிட்டதும் மிகவும் அருமை....

ஆனால் அதற்கு முன்னர் பேசிய மருத்துவர். தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் "பூபெய்தும் நிகழவைக் கொண்டாடும் மாநிலம் நம்முடையது " என்று பெருமையாக் குறிப்பிட...
திரு. மாலன் அவர்கள் பேசிய பொழுது கொண்டாடும் செயல் தவறென்று கூறியது மட்டுமே சிறிய் முரணாகத் தோன்றியது....

பின்னர் பேச வந்த சின்னப் பிள்ளை அவர்கள் மிக அருமையாகப் பேசினார்...
"எவ்வளவோ நாங்க செஞ்சுட்டோம்... இந்த ஒண்ணுதான் எங்களால ஒண்ணுமே செய்ய முடியாத் விஷயம்..
அத இவுங்க ச்சீத்தாவும், எளங்கோவும் செஞ்சுட்டாங்க...
அதுக்காக இங்க வந்த நீங்க அப்புடியே போகக் கூடாது...
ஒவ்வொருத்தரும் இதக் கையிலக் கொண்டுபோகணும்...
கொண்டு போயி மத்தவங்களுக்கும் தெரிய வைக்கணும்...
அதான் பாயிண்டு..."
என்று சின்னப் பிள்ளை அவர்கள் பேசிட பலத்த கைத்தட்டல்கள்..

பின்னர் படம் திரையிடப்படத் தொடங்க...
முதலில் ஆடியோ வரவில்லை...
அப்பொழுது எனக்கே பதறியது... (கடவுளே எந்த ப்ராப்ளமும் வரக்கூடாது...)

 உடனடியாக ஆடியோ சரியாகி திரைப்படம் ஓடத்தொடங்க....

38 நிமிடங்கள் அங்கு அனைவரும் கட்டுண்டு கிடந்தனர்...

அருமை... Remarkeable....Very Nice Presentation...

திரைப்படம் முடிநததும் விருந்தினர்கள் கிளம்பிட நானும் கிளம்பவேண்டிய ஒரு சூழ்நிலை...
எனது நண்பர் ஒருவரால்...
"இன்னைக்கி மட்டும் EXTERNAL HARD DISC வாங்கி குடுக்கலன்னா நீ யாரோ... நான் யாரோ" என்ற நண்பரொருவரின் மிரட்டலுக்குப் பயந்து கிளம்பிட...

லிப்ட் அருகில் இளங்கோவன் பாலகிருஷ்ணன் அவர்கள் நின்றிருந்தார்...
அவரிடம், "Excuse me சார் ஐ ஆம் ஜெயக்குமார் சுப்ரமணியன், ஃபேஸ்புக்" என்று கூறிட...
"நல்லா இருக்கீங்களா (?!?!?!)" என்று கேட்டார்...
(கண்டிப்பா நான் யாருன்னு தெரிஞ்சுருக்காது... இது தேவையா ஒனக்கு...?)

பின்னர் ரிச் ஸ்ட்ரீட் சென்று  நண்பனுக்கு EXTERNAL HARD DISC மற்றும் 3G டாங்கில் வாங்கிக் கொடுத்து....
நட்பினைக் காப்பாற்றிக்கொண்டேன்...

இப்படியாக ஒரு சனிக்கிழமை இனிதே முடிந்தது...

என்றும் அன்புடன்,
சு.ஜெயக்குமார்
நன்றி: 
இளங்கோவன் பாலகிருஷ்ணன் (http://www.facebook.com/ilangovan.balakrishnan.1?fref=ts)