சொந்தமா ஒரு கார்.........வாங்கணும்...
கோவையில் படித்துகொண்டிருந்தபொழுது...
(GPT, கோயம்புத்தூர், 1999-ஆம் வருடம்...)
கல்லூரி முடிந்து... மாலையில் அவினாசி சாலையில் நடந்து CMC அல்லது ஹோப் காலேஜ் ரோடு நிறுத்தம் வரையோ...
அல்லது கொடீசியா பில்டிங் வரையோ நடந்து செல்வதை நானும்... சில நண்பர்களும் வழக்கமாகக் கொண்டிருந்தோம்...
அவ்வாறு நடக்கையில் சாலையோரங்களில் நிறுத்தப்பட்டிருக்கும் விதவிதமான கார்களின் கதவுகளில்... கண்ணாடிகளில்... முகம் பார்த்துக்கொண்டே செல்வோம்...
ஒரு நாள் நண்பன் பழனி கார்த்தி (தற்பொழுது Robert Bosch GmbH, கோவையில் பொறியாளர்),
"நண்பா, படிச்சு முடிச்சதும்... காசு சம்பாதிச்சு சொந்தமா ஒரு..."
அவன் முடிக்கும் முன்னர் நான், "கார் வாங்கனுமா நண்பா...?"
பழனி கார்த்தி, "இல்ல நண்பா...கார் கண்ணாடி வாங்கணும்..."
நான், "படுபாவி..."
இப்பொழுதும் எங்கே காரை பார்த்தாலும்...
கார் கண்ணாடியும்... பழனி கார்த்தியும்தான் நினைவுக்கு வருகிறார்கள்...
கார்த்தி... ஹாப்பி நியூ இயர் நண்பா....
என்றும் அன்புடன்,
சு.ஜெயக்குமார்
