Thursday, 14 February 2013

வாலென்டைன்ஸ் டேயும்... எனது விமானப் பயனமும்....


வாலென்டைன்ஸ் டேயும்... எனது விமானப் பயனமும்....



ஃபிப்ரவரி 14, 2009-ஆம் ஆண்டு புனேயிலிருந்து மும்பை வரை டொயோட்டா குவாலிஸில் பயனம் செய்து...

மும்பையிலிருந்து சென்னைக்கு ஒரு தனியார் விமானத்தில் (பெயர் வேண்டாம்) சென்னைக்கு மூன்று பேர் கொண்ட குழுவாகப் பயணம் செய்தோம்...

ஒரு தள்ளுவண்டியில் தண்ணீர், சாண்ட்விச், மற்றும் ஏதேதோ உணவுப் பொருட்களை விற்றுக்கொண்டு இரு அழகிய ஏர் ஹோஸ்டஸ் பெண்கள் சென்றனர்....

தண்ணீர் கூட பணம் கொடுத்து வாங்க வேண்டிய அவ்விமானத்தில்...

கடுப்புடன் கூடிய பயணம்....

அப்பொழுதுதான் ஒரு சிறிய நகைச்சுவை....

அடுத்த பத்து நிமிடங்களில் மீண்டும் ஒரு தள்ளுவண்டி...
இப்பொழுது உணவுப் பொருட்கள் அல்ல... பரிசுப்பொருட்கள்...

விமானப் பணிப்பெண்கள் கோரிய வசனம்...

"டூ யு வான்ட் டூ பை எனி கிஃ ப்ட் டூ யுவர் வாலென்டைன் சார்..?"

(உங்களுடைய வாலென்டைனுக்கு ஏதேனும் பரிசுப் பொருட்கள் வாங்க வேண்டுமா...?)

அடப் பாவிகளா....? 

வாலென்டைன்ஸ் டே என்றால் காதலர் தினம் என்று கூறுவதால் 

வாலென்டைன் என்பது காதலன் அல்லது காதலியின் பொதுப் பெயர் என்று எண்ணிய அப்பெண்களின் அறியாமையை எண்ணி மனதுக்குள் சிரித்துக்கொண்டே வந்தேன்....

Sunday, 10 February 2013

எங்க அக்கா பையன விஸ்வரூபம் பாக்க அழைச்சுக்கிட்டுப் போன கதை.... படிச்சுட்டு திட்டாதீங்க.... பிளீஸ்....


எங்க அக்கா பையன விஸ்வரூபம் பாக்க அழைச்சுக்கிட்டுப் போன கதை....
படிச்சுட்டு யாரும் 
திட்டாதீங்க.... பிளீஸ்....






நேத்து காலையில எங்க அக்கா பையன (இன்சினியரிங் ஸ்டூடன்ட்) கண்டிப்பா ஒன்ன விஸ்வரூபம் பாக்க அழைச்சுக்கிட்டுப் போறேன் அப்புடின்னு சொல்லிட்டு... வெளியில ஒரு வேலையா போயிட்டேன்...

திடீர்னு 4.30க்கு போன் செஞ்சு என்ன ஆச்சு அப்புடின்னு கேட்டான்...

அய்யனாரும் (Lecturer in AIHT) நம்ம கூட வர்றானாம்...
நங்கநல்லூர் போகலாம் அப்புடின்னு சொல்லி...

8.30 வரை நமக்கு டைம் இருக்கு அப்புடின்னும் சொல்லி....

நங்கநல்லூர் ராஜ ராஜேஸ்வரி கோவில், பக்கத்துல இருக்குற பெருமாள் கோவில், பாபா கோவில் எல்லாம் போனா...

மணி 8.35....

லேட்டாயிடுச்சே அப்புடின்னு எங்க அக்கா பையன் கேக்க...

9.00 மணி வரைக்கும் கவலைப்பட வேண்டாம்னு தைரியம் சொல்லி...

கரெக்டா 8.45 க்கு உள்ள நொளைஞ்சு...

நல்லா பாரு...

விஸ்வரூபம்...

ஆஞ்சநேயரோட விஸ்வரூபம்....

கன்னத்துல போட்டுக்க...

என்று கூறி ஆஞ்சநேயர கும்புட்டுட்டு....

வீட்டுக்கு வந்துட்டோம்....

அவ்வளவுதான்..

ஆனா எங்க அக்கா பையன் திட்டிக்கிட்டே வர்றான்....

நமக்கு இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா என்ன....?

என்றும் அன்புடன்,
சு.ஜெயக்குமார் 

முக்கியக் குறிப்பு:



இன்று அவனுக்கும் எனது அண்ணனுக்கும் காசி தியேட்டரில் டிக்கெட் புக் செய்து விஸ்வரூபம் பார்த்துவிட்டு வந்துவிட்டார்கள்....

நான்தானுங்க டிக்கெட் புக் பண்ணிக் குடுத்தேன்...