எங்க அக்கா பையன விஸ்வரூபம் பாக்க அழைச்சுக்கிட்டுப் போன கதை....
படிச்சுட்டு யாரும்
திட்டாதீங்க.... பிளீஸ்....
நேத்து காலையில எங்க அக்கா பையன (இன்சினியரிங் ஸ்டூடன்ட்) கண்டிப்பா ஒன்ன விஸ்வரூபம் பாக்க அழைச்சுக்கிட்டுப் போறேன் அப்புடின்னு சொல்லிட்டு... வெளியில ஒரு வேலையா போயிட்டேன்...
திடீர்னு 4.30க்கு போன் செஞ்சு என்ன ஆச்சு அப்புடின்னு கேட்டான்...
அய்யனாரும் (Lecturer in AIHT) நம்ம கூட வர்றானாம்...
நங்கநல்லூர் போகலாம் அப்புடின்னு சொல்லி...
8.30 வரை நமக்கு டைம் இருக்கு அப்புடின்னும் சொல்லி....
நங்கநல்லூர் ராஜ ராஜேஸ்வரி கோவில், பக்கத்துல இருக்குற பெருமாள் கோவில், பாபா கோவில் எல்லாம் போனா...
மணி 8.35....
லேட்டாயிடுச்சே அப்புடின்னு எங்க அக்கா பையன் கேக்க...
9.00 மணி வரைக்கும் கவலைப்பட வேண்டாம்னு தைரியம் சொல்லி...
கரெக்டா 8.45 க்கு உள்ள நொளைஞ்சு...
நல்லா பாரு...
விஸ்வரூபம்...
ஆஞ்சநேயரோட விஸ்வரூபம்....
கன்னத்துல போட்டுக்க...
என்று கூறி ஆஞ்சநேயர கும்புட்டுட்டு....
வீட்டுக்கு வந்துட்டோம்....
அவ்வளவுதான்..
ஆனா எங்க அக்கா பையன் திட்டிக்கிட்டே வர்றான்....
நமக்கு இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா என்ன....?
என்றும் அன்புடன்,
சு.ஜெயக்குமார்
முக்கியக் குறிப்பு:
இன்று அவனுக்கும் எனது அண்ணனுக்கும் காசி தியேட்டரில் டிக்கெட் புக் செய்து விஸ்வரூபம் பார்த்துவிட்டு வந்துவிட்டார்கள்....
நான்தானுங்க டிக்கெட் புக் பண்ணிக் குடுத்தேன்...

ஜெயகுமார், ஆரம்பத்துலயே இப்படி அநியாயத்துக்கு மொக்கை போடுறீங்களே :)))
ReplyDeleteசும்மா பாஸ்... :)
Delete