குருக்கள் தாத்தா
எங்கள் ஊருக்கு அருகில் உள்ள சிற்றூர் ஒன்றிலுள்ள குருக்கள் குடும்பமொன்று (சிவன் கோவில் பூஜை செய்பவர்கள்) எங்களுக்கு மிகவும் பழக்கம்.
அவர்கள் வீட்டிலுள்ள அனைவரும் எங்களுடன் உறவினர்கள் போல் பழகுவர்.
குருக்கள் தாத்தாவிற்கு அப்பொழுது எழுபத்தைந்து வயதிற்கு மேல் இருக்குமென்று நினைவு...
ஒரு நாள் மாலை அம்மாவும் அப்பாவும் "குருக்கள் மாமாவுக்கு ஒடம்பு சரியில்லையாம், பாலு டாக்டர்கிட்டதான் சேத்துருக்காம். போய் பாத்துட்டு வரணும்" என்று பேசிக்கொண்டிருந்தனர்.
அன்று மாலை அம்மாவுடன் மருத்துவமனை சென்றிருந்தேன்.
ஒரு சிறிய வார்டில் வரிசையாக கட்டில்கள் வரிசையாக போடப்பட்டு இருக்க, ஒவ்வொரு படுக்கைக்கும் இடையில் ஒரு போர்வை மறைவை ஏற்படுத்தி இருந்தது...
பாட்டியும் தாத்தாவின் மகனும் சோகமுடன் அவர் அருகில் அமர்ந்து இருந்தனர்.
தாத்தாவின் முகமும், தோல் சுருக்கங்களும் முதுமையைக் காட்டின...
சுற்றிலும் மருத்துவமனை நெடி பரவி இருந்ததது.
கண்கள் மூடி படுத்திருந்தவருக்கு இடது கையில் சொட்டு சொட்டாக ட்ரிப்ஸ் இறங்கிக்கொண்டிருத்தது.
அம்மாவை பார்த்ததும் அந்த பாட்டி தாத்தாவிடம் குனிந்து "சரோஜா வந்துருக்கா" என்று சத்தமாகக் கூறிட (கண்கள் தெரியாது. காதுகள் சத்தமாகப் பேசினால் கேட்கும்)அவர் முகத்தில் குழந்தை போல் ஒரு புன்முறுவல்...
சிறிது நேரத்தில் அவரிடமிருந்து விக்கல் எழவும்...
அம்மா, "மாமாவுக்கு விக்கறது பாருங்கோ" என்று கூறிட தண்ணீர் கொடுத்தார்கள்...
விக்கலுக்கு இடையில் அவர் ஏதோ சொல்ல முயற்சிக்க...
வார்த்தைகள் வெளிவரவில்லை....
ஒருவழியாக விக்கல் நின்றதும் மிகவும் பிரயத்தனப்பட்டு தான் சொல்ல வந்ததை வெளியிட்டார்...
"விக்கறது... யாரு வாங்கப்போறா..."
அனைவரும் குபீரென சிரிக்க சோக சூழ்நிலை முற்றிலும் மாறிவிட்டது...
சிறிது நேரம் கழித்து டிஸ்சார்ஜ் செய்து கொண்டு அவர்கள் சென்றுவிட...
மூன்று நாட்கள் கழித்து அவர்கள் வீட்டில் தூக்கத்திலேயே இறைவனடி சேர்ந்தார் என தகவல் வந்தது...
What a sense of humour….
நல்ல தாத்தா…
ஒரு சிறிய வார்டில் வரிசையாக கட்டில்கள் வரிசையாக போடப்பட்டு இருக்க, ஒவ்வொரு படுக்கைக்கும் இடையில் ஒரு போர்வை மறைவை ஏற்படுத்தி இருந்தது...
பாட்டியும் தாத்தாவின் மகனும் சோகமுடன் அவர் அருகில் அமர்ந்து இருந்தனர்.
தாத்தாவின் முகமும், தோல் சுருக்கங்களும் முதுமையைக் காட்டின...
சுற்றிலும் மருத்துவமனை நெடி பரவி இருந்ததது.
கண்கள் மூடி படுத்திருந்தவருக்கு இடது கையில் சொட்டு சொட்டாக ட்ரிப்ஸ் இறங்கிக்கொண்டிருத்தது.
அம்மாவை பார்த்ததும் அந்த பாட்டி தாத்தாவிடம் குனிந்து "சரோஜா வந்துருக்கா" என்று சத்தமாகக் கூறிட (கண்கள் தெரியாது. காதுகள் சத்தமாகப் பேசினால் கேட்கும்)அவர் முகத்தில் குழந்தை போல் ஒரு புன்முறுவல்...
சிறிது நேரத்தில் அவரிடமிருந்து விக்கல் எழவும்...
அம்மா, "மாமாவுக்கு விக்கறது பாருங்கோ" என்று கூறிட தண்ணீர் கொடுத்தார்கள்...
விக்கலுக்கு இடையில் அவர் ஏதோ சொல்ல முயற்சிக்க...
வார்த்தைகள் வெளிவரவில்லை....
ஒருவழியாக விக்கல் நின்றதும் மிகவும் பிரயத்தனப்பட்டு தான் சொல்ல வந்ததை வெளியிட்டார்...
"விக்கறது... யாரு வாங்கப்போறா..."
அனைவரும் குபீரென சிரிக்க சோக சூழ்நிலை முற்றிலும் மாறிவிட்டது...
சிறிது நேரம் கழித்து டிஸ்சார்ஜ் செய்து கொண்டு அவர்கள் சென்றுவிட...
மூன்று நாட்கள் கழித்து அவர்கள் வீட்டில் தூக்கத்திலேயே இறைவனடி சேர்ந்தார் என தகவல் வந்தது...
What a sense of humour….
நல்ல தாத்தா…

நல்ல பதிவு :)
ReplyDelete